முயற்சியின் வெற்றி

கே. ஜெயகணேஷ் – சர்வராக இருந்து ஐஏஎஸ் அதிகாரி ஆனவர்


இவர் வேலூர் மாவட்டத்திலுள்ள வினவமங்கலம்  கிராமத்தைச் சேர்ந்தவர். அவரது தந்தை , கிருஷ்ணன் அதே கிராமத்தில் இயங்கி வந்த ஒரு தொழிற்சாலையில் மேற்பார்வையாளராக பணி புரிந்தார். குடும்பத்தின் மூத்த வாரிசான ஜெயகணேஷுக்கு இரண்டு தங்கைகளும் ஒரு தம்பியும் இருந்தனர்.வறுமையின் காரணமாக அவர், பள்ளிப்படிப்பை எட்டாம் வகுப்புடன் முடித்துக் கொள்ள நேரிட்டது.பிறகு, குடும்ப பாரத்தைச் சுமப்பதற்காக பல வேலைகளைச் செய்துள்ளார்; ஒரு சர்வராகக் கூட இருந்துள்ளார். இந்நிலையில்  தான் அவருக்கு இந்திய பொதுத்துறைத் தேர்வுகளின் மேல் ஆர்வம் வந்தது. தன் கனவின் மீது அதீத நம்பிக்கை வைத்து அவர் தொடர்ந்து ,நெருக்கடிகளுக்கு இடையே முயன்றார் ; ஆறு முறை திறக்காத கதவுகள் , கடைசி வாய்ப்பான ஏழாம் முறை, அவர் பொதுத்துறைத் தேர்வுகளில் இந்திய அளவில் 156 ஆவது இடத்தைப் படித்த போது திறந்தன. “முயற்சி திருவினையாக்கும்” என்பதற்கு இவரே உதாரணமாக இருக்கிறார்.


Comments